Khushbu: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்-அண்ணாமலை வாழ்த்து
Khushbu Sundar: “இது அவரது இடைவிடாத முயற்சி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கான அங்கீகாரம்! அவருக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்”
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
நடிகையாக திரையில் ஜொலித்தவர் அரசியலிலும் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் குஷ்பு தற்போது பாஜகவில் உள்ளார்.
பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ள குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இது அவரது இடைவிடாத முயற்சி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கான அங்கீகாரம்! அவருக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
குப்புவுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
நீங்கள் இதற்கு தகுதியானவர் தான் என்றும், உங்கள் பணி மென்மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்றும் வாழ்த்துகள் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலைக்கு நன்றி கூறிய குஷ்பு
இதனிடையே, அண்ணாமலை பதிவிட்ட ட்வீட்டை ரிட்வீட் செய்த குஷ்பு, மிக்க நன்றி ஜி. உங்கள் ஆதரவும், வாழ்த்தும் எப்போதும் எனக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை என்று குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்