தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindugal Crime : பட்டபகலில் இப்படியா.. கடை மேலாளரின் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்!

Dindugal Crime : பட்டபகலில் இப்படியா.. கடை மேலாளரின் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்!

Divya Sekar HT Tamil
Aug 28, 2023 11:22 AM IST

பழனியில் துணிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடை மேலாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்
இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்று ஞாயிற்றுக்கிழமையும் கடை என்பதால் பொதுமக்கள் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. கடையின் முன்பு மேலாளர் அப்துல் சமது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் வேலை முடித்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தார். இரு சக்கர வாகனத்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த மேலாளர் உடனடியாக அருகில் இருந்த துணிக்கடையின் கேமராவை பரிசோதித்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது.மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் முன்பு நின்று கொண்டிருப்பதும் பின்னர் லாவகமாக அந்த வண்டியை எடுத்து செல்வதும் தெரியவந்தது.

இதனை அடுத்து பழனி நகர காவல் துறையினரிடம் சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார். பகல் நேரத்திலேயே இருசக்கர வாகனத்தை மர்மநபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்