தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Accident : பள்ளிக்கு கிளம்பிய 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதிய பாருங்க!

Accident : பள்ளிக்கு கிளம்பிய 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதிய பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 21, 2023 12:25 PM IST

லாரி ஓட்டுநர் தப்பி தலைமறைவாகி உள்ள நிலையில் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பலியான சிறுமி
பலியான சிறுமி

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை கோவிலாம்பாக்கத்தில் தாய் கீர்த்தியுடன் 10 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தது. அப்போது அதி வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அப்பகுதியில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பற்றி பல செய்திகள், புகார்கள் வெளியான நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்