உல்லாசம் அனுபவித்தோம்.. ஆனால் திருமணம் செய்ய மறுக்கிறார் - பெண் பரபரப்பு புகார்!
Sexual harassment : சென்னையில் இளம்பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய நூலக ஊழியர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் ஊழியராக வேலை செய்தவர் மணி அரசு (29). இவர் மீது இளம்பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த புகார் மனுவில், ”மணி அரசு என்னை காதலிப்பதாக கூறி அன்பாக பழகினார். என்னை திருமணம் செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தார். அதை உண்மை என்று நம்பி அவருடன் நெருக்கமாக பழகினேன்.
இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அதன் பலனாக இருமுறை நான் கர்ப்பம் அடைந்தேன். அவரது வற்புறுத்தலின்பேரில் இரண்டு முறையும் நான் கருவை கலைத்தேன். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
அவரது சொந்த ஊரான திருச்சி துறையூரில் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே மணி அரசு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால் முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம் மணி அரசு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில் அவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்