Crime: ‘கொத்து புரோட்டா’ கேட்டு மாஸ்டரை கொத்து கொத்தாக பிரித்தெடுத்த கும்பல்!
வத்தலகுண்டுவில் கொத்து புரோட்டா கேட்டு ஹோட்டல் மாஸ்டரை சரமாரிய தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் கொத்து புரோடா கேட்டு தகராறில் ஈடுபட்டு புரோட்டா மாஸ்டரை சரமாரியாக தாக்கிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்தவர் இம்தா துல்லா (32). இவர் வத்தலகுண்டு - பெரியகுளம் மெயின் ரோட்டில் சொந்தமாக பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இருக்கும் நிலையில், விடுமுறை தினமான நேற்று இரவு அங்கு மது அருந்திய 6 பேர் கொண்ட கும்பல் பிரியாணி ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர். மது போதையில் இருந்த அந்த கும்பல் பிரியாணி ஹோட்டலில் கொத்து புரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
'கொத்து புரோட்டா' இல்லை என மாஸ்டர் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் புரோட்டா மாஸ்டர் சரமாரியாக தாக்கினர். மேலும், ஹோட்டலில் இருந்த சேர், டேபிள் மற்றும் பாத்திரங்களையும் அடித்து சேதப்படுத்தினர். அப்போது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பெரும் அச்சத்துடன் அங்கிருந்து ஓடிவிட்டனர். புரோட்டா மாஸ்டரை சரமாரியா தாக்கிய அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து புரோட்டா மாஸ்டர் முத்து என்பவர் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலில் கொத்து புரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்டு புரோட்டா மாஸ்டரை சரமாரியாக தாக்கிய சி.சி.டிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்