Annamalai: ‘அண்ணாமலைக்கு அதிர்ச்சி! அண்ணா குறித்த சர்ச்சை பேச்சு’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
‘‘அண்ணாமலை பேசிய வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களிடன் அடிப்படையில், அண்ணாமலை பேச்சு தமிழ்நாட்டில் தேவையில்லாத சமூகபதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியதால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை”

’அண்ணாமலைக்கு ஆப்பு ரெடி!’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்! (ANI )
முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அறிஞர் அண்ணா குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சில கருத்துக்கள் மேடையில் பேசப்பட்டதாகவும், அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்ததாகவும், அதன் பிறகு அறிஞர் அண்ணா அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும்” கூறி இருந்தார்.
இந்த பேச்சுக்கு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன.