Crime: மிஸ்டு கால் பழக்கம் - சிறுமியைச் சீரழித்த 3 பேர் - அப்படியே தூக்கிய காவல்துறை
திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பெங்களூருக்குக் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலைக் கிராமத்தில் வசித்து வருகிறார் 16 வயது சிறுமி. இவர் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தனியார் ஊதுபத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே ஒன்றாம் தேதியன்று வேலைக்குப் போய்விட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற சிறுமி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர் ஆனால் அந்த சிறுமி கிடைக்கவில்லை. இது குறித்து அந்த சிறுமியின் தாயார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுமையைத் தேடி வந்தனர்.
பின்னர் சிறுமியின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு அவரிடம் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் பெங்களூருவில் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் பெங்களூர் சென்றனர்.
பின்னர் சிறுமியுடன் இருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து மணப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய நபர் 32 வயதான முபாரக் அலி. பின்னர் இது குறித்து சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமிக்கும் வேலூரைச் சேர்ந்த முபாரக் அளிக்கும் தெரியாமல் கொடுத்த மிஸ்டு கால் அழைப்பு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தொடர்ந்து செல்போனில் பேசி அந்த சிறுமையைக் காதலிப்பதாக அவர் ஏமாற்றியுள்ளார்.
கடந்த மே 1ஆம் தேதி அன்று மணப்பாறைக்கு வந்த முபாரக் அலி, சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை ஏமாற்றி பெங்களூருக்குப் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னரங்கு அந்த சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவர் தனது நண்பர்கள் ஆன சதாம் உசேன், நியாஸ் ஆகியோரிடம் விட்டுவிட்டு பெங்களூரில் இருந்து வேலூருக்கு முபாரக் அலி சென்று விட்டார்.
அதற்குப் பிறகு பாதுகாப்பிற்காக இருந்த அந்த இருவரும் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதற்குப் பிறகு இந்த சிறுமியை மீண்டும் ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தபோது காவல்துறையினரிடம் அவர்கள் சிக்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் மூன்று பேரையும் தற்போது கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று பேர் மீதும் சிறுமி கடத்தல், வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் பண் கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்