Wedding Gift: நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான பரிசு - வியந்து போன மணமக்கள்
நண்பனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான பரிசுப் பொருட்களை மற்ற நண்பர்கள் கொடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் நயீம், சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முஸ்கான் இருவருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த திருமண வரவேற்பு விழாவில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். பலரும் மணமக்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களைக் கொடுத்தனர்.
அப்போது திடீரென மேடைக்கு வந்த நயீம் நண்பர்கள் மணமக்களுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றைக் கொடுத்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன் விலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகுகள் உள்ளிட்டவற்றை அலங்காரம் செய்த அன்பளிப்பாக வழங்கினர்.
மணமக்களை நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் மேடையிலேயே அந்த அன்பளிப்பைத் திறந்து பார்த்த மணமக்கள் பரிசுப் பொருளைப் பார்த்து வியப்படைந்தனர். கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக அங்கே இருந்தவர்கள் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்