K Manickam: பாஜகவிற்கு போன வேகத்தில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான K.மாணிக்கம் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தில் வேறுன்ற தேவையான நடவடிக்கைகளை மிகவும் மும்மரமாக செய்து வருகிறது. அந்த வகையில் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த முயற்சியில் கு.க.செலவம், வி.பி. துரை சாமி, நயினார் நாகேந்திரன், குஷ்பு உள்ளிட்ட பலர் அடங்கினர். இந்த வரிசையில் கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி அதிமுகவின் வழிகாட்டு உறுப்பினராகவும், சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த மாணிக்கம், திருப்பூரில் அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தின் போது அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாரும் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் (7.7.2023 - வெள்ளிக்கிழமை) பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மாணிக்கம் நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருந்த இவர் திமுக ஆட்சியில் பெரும்பான்மையான ஒப்பந்த வேலைகளைச் செய்து வளர்ந்தார். அதன் பின்னர், 2011 -ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஓபிஎஸ் ஆதரவாளராக மாறினார்.
அப்போதும் செல்வாக்கு மிகுந்த ஒப்பந்ததாரராக வலம் வந்தார். மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரத்திற்காக தன்னுடைய நிலத்தைக்கொடுத்து ஜெயலலிதாவின் கண்ணில் பட்ட இவர் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். மதுரை புறநகர் அதிமுக மாவட்ட துணை செயலாளராகவும் பணியாற்றிய வந்த இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
டாபிக்ஸ்