Tamilisai On Amit Shah Controversy: அமித் ஷா என்னை திட்டினாரா? மௌனம் கலைத்தார் தமிழிசை சவுந்தராஜன்! நடந்தது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக எழும் தேவையற்ற யூகங்களை தெளிவுப்படுத்தவே இதை பதிவிடுவதாக தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

அமித் ஷா என்னை திட்டினாரா? மௌனம் கலைத்தார் தமிழிசை சவுந்தராஜன்! நடந்தது என்ன?
மேடையில் அமித் ஷா உடன் தமிழிசை சவுந்தராஜன் உரையாடும் வீடியோ குறித்த சர்ச்சை குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பு
விஜயவாடாவின் புறநகரில் உள்ள கேசரப்பள்ளியில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே காலை 11.27 மணியளவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவுடன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் மகன் நாரா லோகேஷ் மற்றும் 22 பேரும் பதவியேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி.நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.