Tamilisai Soundharajan: அமித் ஷா குறித்த கேள்வி! ஜகா வாங்கிய தமிழிசை! சுயமரியாதை போச்சே! கலாய்க்கும் கேரளா காங்கிரஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilisai Soundharajan: அமித் ஷா குறித்த கேள்வி! ஜகா வாங்கிய தமிழிசை! சுயமரியாதை போச்சே! கலாய்க்கும் கேரளா காங்கிரஸ்!

Tamilisai Soundharajan: அமித் ஷா குறித்த கேள்வி! ஜகா வாங்கிய தமிழிசை! சுயமரியாதை போச்சே! கலாய்க்கும் கேரளா காங்கிரஸ்!

Kathiravan V HT Tamil
Published Jun 12, 2024 06:06 PM IST

”இதுதான் பெண்களுக்கு எதிரான பாஜகவின் கலாசாரம் மற்றும் நடத்தை. சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும். மருத்துவரும், முன்னாள் ஆளுநருமான நீங்கள் குற்றப் பின்னணி உடையவரிடம் இருந்து, இது போன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக்கூடாது” என கேரளா காங்கிரஸ் ட்வீட்!

Tamilisai Soundharajan: அமித் ஷா குறித்த கேள்வி! ஜகா வாங்கிய தமிழிசை! சுயமரியாதை போச்சே! கலாய்க்கும் கேரளா காங்கிரஸ்!
Tamilisai Soundharajan: அமித் ஷா குறித்த கேள்வி! ஜகா வாங்கிய தமிழிசை! சுயமரியாதை போச்சே! கலாய்க்கும் கேரளா காங்கிரஸ்!

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற விழா மேடையில் இருந்த தமிழிசை சவுந்தராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பு

விஜயவாடாவின் புறநகரில் உள்ள கேசரப்பள்ளியில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே காலை 11.27 மணியளவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவுடன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் மகன் நாரா லோகேஷ் மற்றும் 22 பேரும் பதவியேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி.நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழிசையை திட்டினாரா அமித்ஷா?

இந்த நிகழ்சியின் போது, மேடையில் அமர்ந்து இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தராஜன் வணக்கம் வைத்தார். அப்போது அவரை அழைத்து பேசும் அமித்ஷா, விரலை நீட்டியபடி பேசும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜனிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது வணக்கம் தெரிவித்துவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் தமிழிசை சவுந்தராஜனிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிந்து கொண்டு பேசுவது போன்ற வீடியோவை கேரளா காங்கிரஸ் கமிட்டி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கருத்து தெரிவித்து உள்ளது.

அதில், ”இதுதான் பெண்களுக்கு எதிரான பாஜகவின் கலாசாரம் மற்றும் நடத்தை. சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும். மருத்துவரும், முன்னாள் ஆளுநருமான நீங்கள் குற்றப் பின்னணி உடையவரிடம் இருந்து, இது போன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக்கூடாது” என தெரிவித்து உள்ளது.

தமிழிசை பேசியது என்ன?

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அதிமுக உடன் கூட்டணி வைத்து இருந்தால், திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்து இருக்காது என்பது கணக்கு ரீதியாக உண்மை. அதிமுக, பாஜக கூட்டணி எடுத்த வாக்குகளை கூட்டினால் திமுகவை விட அதிகமாக வந்து இருக்கும்.

கூட்டணி என்பது ஒரு அரசியல் வியூகம்தான், முழுமையாக கூட்டணியை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து அல்ல, தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து அகில பாரத தலைமைதான் முடிவு எடுக்க முடியும் என கூறி இருந்தார்.

மேலும், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த தமிழிசை சவுந்தராஜன், “நான் கட்சியில் இருக்கும் போது சில அளவுகோலை வைத்து இருந்தேன். சமூகவிரோதிகள் போல் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கமாட்டேன். சமீபகாலத்தில் சமூகத்தில் நிறைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதை தவிர்த்து கட்சியில் கடுமையாக உழைக்க கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்” என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.