ED Raid: செந்தில் பாலாஜி உதவியாளர், டாஸ்மாக் மேலாளர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை
ஒரே நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு, டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளருக்கு சொந்தமான நான்கு இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள சங்கரின் வீடு மற்றும் அலுவலகம், கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், சின்ன ஆண்டங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை, அம்பாள் நகரில் உள்ள வீடு என மொத்தம் 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதேபோல் கோவையை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் வீட்டிலும் அமலாக்கதுறையின் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ள இவரது வீட்டில் இன்று காலை முதல் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.=
இந்த சோதனையின்போது அமலாக்கத்துறையினர் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவர் தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கதுறையில் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து தற்போது கரூரில் உள்ள செந்தில்பாலாஜி உதவியாளர், கோவை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் ஆகியோரது வீட்டில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்