நாயின் பாச பிணைப்பு.. மூதாட்டிக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த நாய்-வைரல் வீடியோ
ஒட்டன்சத்திரத்தில் வேடசந்தூர் பகுதியில் இருந்து பேருந்தில் பயணம் செய்து வந்த மூதாட்டியை பேருந்து ஏரி பாசத்தோடு அழைத்துச் சென்ற நாயின் வீடியோ வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் : ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தொழில் சம்பந்தமாக வேடசந்தூர் பகுதிக்கு சென்று விட்டு தனியார் பேருந்தில் ஒட்டன்சத்திரத்திற்கு பயணம் செய்து வந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு பயணிகளை இறக்கி விட பேருந்து நிறுத்தியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது மூதாட்டி பேருந்து விட்டு கீழே இறங்குவதற்கு முன்பே தனது எஜமானிக்காக காத்திருந்த செல்லப்பிராணியான நன்றியுள்ள நாய் மூதாட்டி இறங்குவதற்கு முன்பே வேகமாக பேருந்தின் உள்ளே ஏரி அந்த மூதாட்டியை கையோடு இறக்கியது. அப்போது பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிட நாயும் ஒரு ஜீவன் தானே ஏன் பேருந்தில் ஏறக்கூடாது என கூறிவிட்டு இறங்கிச் சென்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பேருந்தில் பயணம் செய்து வந்த தனது எஜமானியான மூதாட்டியை அன்பாக பேருந்தில் ஏறி அழைத்துச் செல்லும் வீடியோ ஒட்டன்சத்திரம் பகுதியில் வெளியாகி அனைவரையும் நெகிச்சியடைய செய்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்