DMK: 'நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆனார் கனிமொழி!’ கொறடா ஆனார் ஆ.ராசா! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் பொறுப்பு!
Parliamentary Committee: மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்ற குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பியும்; மக்களைவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பியும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

DMK: நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆனார் கனிமொழி! கொறடா ஆனார் ஆ.ராசா! டி.ஆர்.பாலு, திருச்சி சிவாவுக்கும் பொறுப்பு!
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி எம்.பியை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு அறிவிப்பு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்ற குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பியும்; மக்களைவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பியும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநி மாறன், எம்.பியும், மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பியும் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.