Silanthi Check Dam: சிலந்தியாறு தடுப்பணை பணிய நிறுத்திக்கோங்க.. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
Silanthi Check Dam: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவி குளம் பகுதியில் பெருகுடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பனை கட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்துமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Silanthi Check Dam: சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாகக் கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமராவதி அணை விபரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமாராவதி அணை. இந்த அணையானது சுமார் 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை 4 டிஎம்சி நீர் கொள்ளவு கொண்டது. கடந்த 1958ம் ஆண்டு அமராவதி அணை கட்டப்பட்டது. இதன் முக்கிய நீர் ஆதாரம் பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை ஆகும். இந்த அணையின் மூலம் தமிழகத்தின் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த அமராவிதி ஆற்றுப்படுகை வாயிலாக 110 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவி குளம் பகுதியில் பெருகுடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்துமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து மக்கள் செய்தி தொடர்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,