Crime: பலருடன் உல்லாசமா? கள்ளக்காதலியை கத்தரிகோலால் குத்தி படுகொலை செய்த இளைஞர்.. கோவையில் பயங்கரம்!
Murder: மதுரை வீரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் ஆண்கள் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த மதுரை வீரன் தனது கள்ளக்காதலியை கண்டித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கு வயது 40. டெய்லரான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மதுரை வீரன் கோவையில் வசித்து வந்தார். கணவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் வீரம்மாள் தனது மகன்களை அழைத்துக்கொண்டு தேனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்ரா இவருக்கு வயது 35. இவர் கோவை சின்னத்தடாகம் பகுதியில் கடந்த 8 மாதமாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். சின்னத்தடாகம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை வீரனுக்கும், சித்ராவுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்த சித்ராவுக்கும், மதுரை வீரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கடந்த 4 மாதமாக சின்னத்தடாகம் பகுதியில் வீடு எடுத்து கணவன்-மனைவி போன்று உல்லாசமாக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே சித்ராவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மதுரை வீரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் ஆண்கள் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த மதுரை வீரன் தனது கள்ளக்காதலியை கண்டித்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி மதுரை வீரன், சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் நீண்ட நேரமாக வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்துள்ளார். உடனே வீட்டுக்கு சென்றதும் இது தொடர்பாக சித்ராவிடம் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சித்ரா, நான் அப்படிதான் பேசுவேன், நான் பல ஆண்களுடன் பழகுவேன்..என்னிடம் நீ எப்படி கேட்கலாம் என்று கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதுரை வீரன், தான் வைத்திருந்த கத்தரிகோலை எடுத்து சித்ராவின் வயிறு, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மதுரை வீரன், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்து இருக்கிறார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.