CM Stalin : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Kilambakkam Bus Terminus : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் கட்டப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இங்கு 14 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 840 தனியார் பேருந்துகளுடன் 2,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 7400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் சிறப்புகள்
நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இப்ப பேருந்து நிலையத்தில், இலவச அவசர சிகிச்சை மையம், தாய்மார்களுக்கான பால் ஊட்டும் அறைகள், உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான தங்கும் விடுதிகள் உள்ளன.
ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்தனி கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 88.52 ஏக்கர், கட்டத்தின் மொத்த பரப்பளவு 60,451.41 சதுர மீட்டர்களாகும்.
2 பேருந்து நிலையம் முழுப் பயன்பாட்டிற்கு வரும்பொழுது நாள் ஒன்றுக்கு 1 லட்சம் மக்கள் பயணிப்பார்கள்.
540 கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிட வசதிகள் உள்ளன.
4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் 12 இடங்களில் குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை, 4 உணவகங்கள் மற்றும் 100 கடைகள் இம்முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
6 ஏக்கர் நிலப்பரப்பில் எழில்மிகு நீருற்று, நடைபாதையுடன் கூடிய பூங்கா இப்பேருந்து முனையத்துக்கு எழில் சேர்க்கிறது.
2,310 பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9