H.Raja : முதல்வர் ஸ்டாலின், உதயநிதி குறித்து அவதூறு .. ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கடந்த 19 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், இரு மதத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இது தொடர்பாக காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியசாமி அளித்த புகாரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதோடு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காளையார் கோவில் மக்களிடையே இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் மோதல் போக்கை உருவாக்கும் எண்ணத்தோடு பேசியதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஹெச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 294, 295ஏ, 505/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார். பொதுக்கூட்டங்களில் அவமரியாதையாக பேசுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத கலவரத்தை உருவாக்கும் வகையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் ஹெச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்