தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore : கோவையில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்!

Coimbatore : கோவையில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 23, 2023 01:06 PM IST

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரின் 8 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவன்
கோவையில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதை அடுத்து கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவரின் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்ததால் மூளைச் சாவு ஏற்பட்டது. இதனால் மாணவனின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். இதனை தொடர்ந்து மாணவரின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தோல், கணையம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டன. 

மூளைச்சாவடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகளின் மூலம் எட்டு பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்