தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore:உல்லாச வீடியோ; பெண்ணை மிரட்டி தொடர் பலாத்காரம் செய்த வங்கி ஊழியர்!

Coimbatore:உல்லாச வீடியோ; பெண்ணை மிரட்டி தொடர் பலாத்காரம் செய்த வங்கி ஊழியர்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 03, 2023 10:30 AM IST

வங்கியில் பணம் எடுக்க வந்த பேராசிரியையின் செலானில் இருந்த போன் நம்பரை எடுத்த கோபு, அந்த பெண்ணுக்கு போன் செய்து தங்களிடம் நண்பராக இருக்க விரும்புவதாக கூறி, அடிக்கடி பேசி வந்துள்ளார்.

கோவையில் பரபரப்பு
கோவையில் பரபரப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே  கடந்த 2015 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்றிருக்கிறார் அந்த பெண். அப்போது அங்கு வங்கியில் கணக்காளராக பணியாற்றிய பாலக்காட்டைச் சேர்ந்த கோபு குமார் என்பவர் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. கோபு குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்ட நிலையில் ஒரு குழந்தை இருக்கிறது.

வங்கியில் பணம் எடுக்க வந்த பேராசிரியையின் செலானில் இருந்த போன் நம்பரை எடுத்த கோபு, அந்த பெண்ணுக்கு போன் செய்து தங்களிடம் நண்பராக இருக்க விரும்புவதாக கூறி, அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் பேராசிரியை தான் பி.ஹெச்.டி படிக்க கோவை வருவதாக கூறிய நிலையில், தானும் பி.ஹெச்.டி படிக்க  வேண்டும் என்று அதற்கு தாங்கள்தான் உதவ வேண்டும் என்று கூறியதோடு, தானும் கோவைக்கு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேராசியையும், கோபு குமாரும் கோவைக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இரண்டு பேரும் காரில் பல்கலைக்கழகத்திற்கு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் பேராசிரியை தனது உறவினர் வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி கோபு குமாரை அழைத்துச் சென்றார். அதற்கு முன்னதாக சாப்பிட்டு விடலாம் என்று அவர் கூறிய நிலையில், இருவரும் ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது கோபுகுமார் பேராசிரியரிடம் நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி திடீரென தான் கொண்டு வந்த தாலியை அவர் கழுத்தில் கட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியான பேராசிரியை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

உடனே பேராசிரியையை சமாதானப்படுத்திய கோபு, ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக பேராசிரியையுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் இருவரும் உல்லாசமாக இருந்ததை பேராசிரியைக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோவும் எடுத்துள்ளார்

அதன் பின்னர் போட்டோ மட்டும் வீடியோ காட்சிகளை காட்டி  மிரட்டி அடிக்கடி பேராசிரியையை தன்னுடைய பாலியல் இச்சைக்கு இணங்க வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பேராசிரியைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் கோபு விடாமல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பேராசிரியை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். 

அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனையடுத்துஆபாச புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டுதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோபுகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்