Chengalpattu Accident : செங்கல்பட்டில் கோர விபத்து - 4 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்!
செங்கல்பட்டில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த நபர்களை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சாலை விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் தலைமறைவாகியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.ஆர்.எம். கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் கார்த்திக் (23), முதலாமாண்டு மாணவர் ஜஸ்வந்த் (20) இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.