Crime : கொடூரம்.. ஒன்றரை வயது குழந்தை கொலை.. பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை!
நாகர்கோவில் அருகே ஒன்றரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் நித்திரவிளை அருகே காஞ்சாம்புரத்தை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி பிரபுஷா. இவர்களது மகன் அரிஸ்டோ பியூலாஸ். ஒன்றரை வயது ஆகிறது. இவர்கள் தற்பொழுது அஞ்சுகிராம அருகே வசித்து வருகிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
சதாம் உசேன் அந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அரிஸ்டோ பியூலாஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவவர்கள் அரிஸ்டோ பியூலாசை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அரிஸ்டோ பியூலாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரையும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரிஸ்டோ பியூலாஸ் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடலில் காயங்கள் உள்ளதையடுத்து அவரை கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கொன்றது யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.