தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Summer Vacation: வாட்டி வதைக்கும் வெயில்.. ஊட்டிக்கு படையெடுக்கும் மக்கள்!

Summer Vacation: வாட்டி வதைக்கும் வெயில்.. ஊட்டிக்கு படையெடுக்கும் மக்கள்!

Karthikeyan S HT Tamil
Apr 17, 2023 11:14 AM IST

குளுகுளு கால நிலை மற்றும் இயற்கைக் காட்சிகள் உள்ளிட்டவற்றை அனுபவிக்கத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.

ஊட்டி
ஊட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகமெங்கும் கோடை வெயில் வாட்டி வதைக்கத் துவங்கிவிட்ட நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது குறைந்த அளவாக 12 டிகிரி செல்சியஸும் அதிக அளவாக 22 டிகிரி செல்சியஸும் வெப்ப நிலை காணப்படுகிறது. இந்த இதமான கால நிலையினை அனுபவிப்பதற்கும் இங்குள்ள இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்கும் மலை ரயிலில் பயணிப்பதற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தோட்டக் கலைத் துறையின் கீழ் உள்ள தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மேலும், உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் நிலவும் குளுகுளு கால நிலை மற்றும் இயற்கைக் காட்சிகள் உள்ளிட்டவற்றை அனுபவிக்கத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் நீலகிரியில் இதமான காலநிலை நிலவுகிறது இதனை அனுபவிப்பதற்காக விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தந்திருந்தனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் மலை ரயிலில் பயணிப்பதிலும் படகு சவாரி செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டினர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்திருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point