Palani : பழனியில் லாரியை மறித்து வழிப்பறி.. யார் அந்த 3 பேர்..போலீசார் விசாரணை!
பழனியில் ஐஸ்கிரீம் லோடு ஏற்றி வந்த லாரி மறித்து 3 நபர்கள் ஓட்டுநரை தாக்கி பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் : பழனி அருகே சிவகிரி பட்டி பைபாஸ் சாலையில் இடும்பன் குளம் அருகில் திண்டுக்கல்லில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி ஐஸ்கிரீம் லோடு ஏற்றிச் சென்றது. அப்போது லாரியை மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் மறித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
பின்னர் ஓட்டுநர் ஹரிஹரனை கட்டையால் தாக்கி ரூபாய் 2000 பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதில் காயம் அடைந்த ஓட்டுநர் ஹரிஹரனை சிலர் மீட்டு பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அன்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து ஹரிஹரன் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை நேரத்தில் பைபாஸ் சாலையில் சென்ற லாரியை மறித்து ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்