தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sexually Harassing : 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!

Sexually Harassing : 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்!

Divya Sekar HT Tamil
Feb 10, 2023 12:15 PM IST

நாகர்காவிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 11ஆம் வகுப்பு மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

ட்ரெண்டிங் செய்திகள்

சம்பவத்தன்று காலை வழக்கம்போல சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றார். வீட்டில் சிறுமி மட்டுமே இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பள்ளி மாணவன் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம்,

சிறுமி தனக்கு நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு 16 வயது என்பதால் அவரை நெல்லை மாவட்டத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்