Arjun Tendulkar: ‘நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட..’ மகனுக்காக உருகிய சச்சின்!
Sachin Tendulkar: ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியில் அர்ஜுன் முதல் முறையாக 2021 ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான தனது மகன் அர்ஜூனுக்கு, ‘தொடர்ந்து கடினமாக உழைத்து விளையாட்டை மதிக்குமாறு’ பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
23 வயதான அர்ஜுன், ஒரு ஆல்-ரவுண்டர், தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய அவர், இரண்டு அற்புதமான ஓவர்களை வீசினார். நேற்று நடந்த போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், இரண்டு ஓவர்களை வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்நிலையில் தன் மகன் அர்ஜூனின் எண்ட்ரி குறித்து , தந்தை சச்சின் சில அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
"அர்ஜுன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கிரிக்கெட் வீரராக உங்களின் பயணத்தில் இன்னொரு முக்கியமான படியை எடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையாக, உங்களை நேசிக்கும் மற்றும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள ஒருவராக, விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீங்கள் தொடர்ந்து அளிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். விளையாட்டு உங்களை மீண்டும் நேசிக்கும்" என்று டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.
"நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள், நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!" என்று அந்த ட்விட்டில் சச்சின் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல்லின் 15 ஆண்டு கால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர். டெண்டுல்கர் 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறு ஆண்டுகள் விளையாடினார்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியில் அர்ஜுன் முதல் முறையாக 2021 ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்