தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Special Stoty About International Tiger Day

காடுகளின் பாதுகாவலனை காத்திடுவோம் - இன்று சர்வதேச புலிகள் தினம்!

Jul 29, 2022 12:57 PM IST Divya Sekar
Jul 29, 2022 12:57 PM , IST

  • நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதி ஏற்போம்.

கடந்த 2010-ம் ஆண்டு ரஷியாவில் 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு நடந்தது. இதில், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புலிகள் இனத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் ஜூலை 29-ந் தேதி உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

(1 / 9)

கடந்த 2010-ம் ஆண்டு ரஷியாவில் 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு நடந்தது. இதில், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புலிகள் இனத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் ஜூலை 29-ந் தேதி உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உணவு சங்கிலியை காப்பதற்கும், பல்லுயிர் சூழலை பாதுகாக்கவும் காட்டில் புலிகளின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் புலிகள் தான் காடுகளின் பாதுகாவலன். புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான் ஜூலை 29 சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

(2 / 9)

உணவு சங்கிலியை காப்பதற்கும், பல்லுயிர் சூழலை பாதுகாக்கவும் காட்டில் புலிகளின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் புலிகள் தான் காடுகளின் பாதுகாவலன். புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான் ஜூலை 29 சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வங்கப் புலி, இந்தோசீனப் புலி, மலேசியப் புலி, சுமத்திராப் புலி, சைபீரியப் புலி, தென்சீனப் புலி, தங்கநிறப் பட்டைப் புலிகள், மால்டீஸ் புலி, பலகைக் கல்நிறப் புலி என பல வகைகள் உள்ளது. புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். பத்தில் ஒரு புலியின் வேட்டை தான் வெற்றியடையும். இதனால் புலிகளால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும். புலிகளுக்கு ஜீரண சக்தியும் குறைவு என்பதால் ஒரு நாள் எடுத்துக் கொள்ளும் கிலோ கணக்கிலான உணவினை செரிக்க தாமதமாகும். புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும். வேட்டையாடுதல், பிற உயினங்களால் பாதிப்பு நேராமல் இருந்தால் காடுகளில் வாழும் புலிகள் 26 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

(3 / 9)

வங்கப் புலி, இந்தோசீனப் புலி, மலேசியப் புலி, சுமத்திராப் புலி, சைபீரியப் புலி, தென்சீனப் புலி, தங்கநிறப் பட்டைப் புலிகள், மால்டீஸ் புலி, பலகைக் கல்நிறப் புலி என பல வகைகள் உள்ளது. புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். பத்தில் ஒரு புலியின் வேட்டை தான் வெற்றியடையும். இதனால் புலிகளால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும். புலிகளுக்கு ஜீரண சக்தியும் குறைவு என்பதால் ஒரு நாள் எடுத்துக் கொள்ளும் கிலோ கணக்கிலான உணவினை செரிக்க தாமதமாகும். புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும். வேட்டையாடுதல், பிற உயினங்களால் பாதிப்பு நேராமல் இருந்தால் காடுகளில் வாழும் புலிகள் 26 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

புலிகளை பொறுத்தவரை பசித்தால் மட்டும் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை. புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும். பொதுவாக வனப்பகுதிக்குள் வசிக்கும் புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை. புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.

(4 / 9)

புலிகளை பொறுத்தவரை பசித்தால் மட்டும் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை. புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும். பொதுவாக வனப்பகுதிக்குள் வசிக்கும் புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை. புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவல் படி, இந்தியாவில் 2012 முதல் இதுவரை 1,059 புலிகள் இறந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கால கட்டத்தில் 66 புலிகள் இறந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் புலிகள் இந்தியாவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவில் 2010-ம் ஆண்டில் 1,706 புலிகள் இருந்தன. இதுவே 2014-ம் ஆண்டில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 2,967 ஆக உயர்ந்துள்ளது.

(5 / 9)

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவல் படி, இந்தியாவில் 2012 முதல் இதுவரை 1,059 புலிகள் இறந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கால கட்டத்தில் 66 புலிகள் இறந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் புலிகள் இந்தியாவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவில் 2010-ம் ஆண்டில் 1,706 புலிகள் இருந்தன. இதுவே 2014-ம் ஆண்டில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 2,967 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரகாண்டில் 340 புலிகள் உள்ளன. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும். புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

(6 / 9)

இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரகாண்டில் 340 புலிகள் உள்ளன. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும். புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

நாட்டின் புலிகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளது. 2018 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, மாநிலத்தில் குறைந்தபட்ச புலிகளின் எண்ணிக்கை 264. புள்ளியியல் அடிப்படையில், இது 300 ஆக இருக்கலாம். புலிகளின் எண்ணிக்கை 2022 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(7 / 9)

நாட்டின் புலிகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளது. 2018 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, மாநிலத்தில் குறைந்தபட்ச புலிகளின் எண்ணிக்கை 264. புள்ளியியல் அடிப்படையில், இது 300 ஆக இருக்கலாம். புலிகளின் எண்ணிக்கை 2022 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் 2006-ம் ஆண்டில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகிய காரணங்களால் அடிக்கடி மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் புலிகள் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. இதனால் மனிதன், புலிகள் இடையே மோதல் ஏற்படுகிறது.

(8 / 9)

இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் 2006-ம் ஆண்டில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகிய காரணங்களால் அடிக்கடி மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் புலிகள் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. இதனால் மனிதன், புலிகள் இடையே மோதல் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. நாம் வாழ நீரும், சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் பெருக புலிகள் வேண்டும். எனவே, வனப்பகுதி அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். எனவே நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதி ஏற்போம்.

(9 / 9)

நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. நாம் வாழ நீரும், சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் பெருக புலிகள் வேண்டும். எனவே, வனப்பகுதி அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். எனவே நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதி ஏற்போம்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்