Dream Benefits: உங்கள் கனவில் இந்த 9 விசயம் வந்தால்.. உங்கள் விதி கட்டாயம் மாறுமாம்!
- Kanavu Palan: வாழ்க்கையில் ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு பலன் இருக்கிறது. அந்த வகையில் கனவுகளுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பலன்கள் சில இதோ:
- Kanavu Palan: வாழ்க்கையில் ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு பலன் இருக்கிறது. அந்த வகையில் கனவுகளுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பலன்கள் சில இதோ:
(1 / 13)
கனவுகள் நிஜ வாழ்வில் பலன் தரும் என்றால் நம்பத் தோன்றுகிறதா? கனவு சாஸ்திரங்கள் அதற்கான இலக்குகளை தீர்மானித்துள்ளது என்கிறார்கள். (Pexels)
(2 / 13)
கனவுகள் உங்களுக்கு நன்மைகளையும், தீமைகளையும் அளிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுவதாக சில ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்ன மாதிரி கனவுகள் என்பதை பார்க்கலாம்.(Pexels)
(3 / 13)
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வரும் கனவுகள் பயங்கர சக்தி வாய்ந்தவை என்கிறதாம் கனவு சாஸ்திரம். (Pexels)
(4 / 13)
பிரம்மமுகூர்த்தத்தில் வரும் கனவுகளுக்கு பிற கனவுகளை விட அதிக சக்தி இருக்கும் என்கிறார்கள். (Pexels)
(5 / 13)
யானைகள் கனவில் வந்தால் அதிலும் ஆசி வழங்குவது போல, தும்பிக்கையால் கழுத்தில் மாலையிடுவது போல கனவு வந்தால் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்லப் போகிறீர்கள் என்று அர்த்தம் என்கிறார்கள். (Pexels)
(6 / 13)
வெள்ளை நிறை பசு மாடு கனவில் வந்தால் அதீத நன்மை கிடைக்கும் என்கிறார்கள். இயல்பாகவே பசுவை கடவுளாக பாவிப்பதால் கனவில் வரும் போது அது இறையருள் உருவமாக பார்க்கப்படுகிறது. (Pexels)
(7 / 13)
வெள்ளை நிற குதிரை வந்தால், வெள்ளக்குதிரை ஓடுவது போல, வெள்ளைக் குதிரையில் சவாரி செய்வது போல கனவு வந்தால் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் பெறப்போகிறீர்கள் என்று கூறுகிறார்கள். குதிரை வேகத்தையும், சுக்ரனின் அம்சத்தையும் குறிக்கும் குறியீடாகும்.(Pexels)
(8 / 13)
மயில் தோகை அல்லது தோகை விரித்த மயில், ஆடும் மயில் ஆகியவை கனவில் வந்தால் அது பயங்கர அதிர்ஷ்டத்தை தரும் என்கிறார்கள். அதிலும் வெள்ளை மயில் கனவில் வந்தால் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்று அர்த்தமாம்.(Pexels)
(9 / 13)
பஞ்ச பூதங்களில் பரிசுத்தமானதாக கருதப்படும் நெருப்பு கனவில் வந்தால் பணவரவு, திருமணம் பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.(Pexels)
(10 / 13)
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அதே போல கோபுர கலசங்கள் கனவில் வந்தால் நினைத்தவை நடக்கும் பலன்கள் கிட்டும் என்கிறார்கள்,(Pexels)
(11 / 13)
ஏழு நிறங்கள் கொண்ட வானவில் கனவில் வந்தால் வசந்தமான சூழல், வசந்தமான வாழ்க்கை சூழல் அமையப்போகிறது என்று கூறப்படுகிறது. (Pexels)
(12 / 13)
தங்க நகைகள், தங்க நகை அணிந்தவாறு கனவுகள் வந்தால் செல்வ கடாக்ஷம் பெருகப் போகிறது என்று அர்த்தமாம். தங்க மகாலட்சுமியின் அம்சம் என்பதால், அதற்கான அறிகுறி தான் தங்கம் தொடர்பான கனவுகள் வரக் காரணம் என்கிறார்கள். (Pexels)
மற்ற கேலரிக்கள்