Kubera Worship: கோடி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேர வழிபாடு!
- குபேர வழிபாடு கோடி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குபேர வழிபாடு பற்றியும், குபேர விரதம் பற்றியும் இங்கு காண்போம்.
- குபேர வழிபாடு கோடி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குபேர வழிபாடு பற்றியும், குபேர விரதம் பற்றியும் இங்கு காண்போம்.
(1 / 6)
குபேரன் தோன்றிய நாள் வியாழக்கிழமை. எனவே வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று குபேர பூஜையை செய்யலாம். குபேரருக்குப் பிடித்ததும், ஈசனுக்கு மிக உகந்ததுமான வில்வ இலையை வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
(2 / 6)
செல்வ வளத்தைப் பெருக்குவதற்காகக் குபேரனுக்கு பிரத்தியேகமாக வீட்டில் விரதம் இருப்பது வழக்கம். அந்த விரதத்தின் போது லக்ஷ்மி தேவியையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் முழு பலனையும் பெற முடியும்.
(3 / 6)
அட்சய திருதியை சுபநாளில் குபேரனை வணங்கினால் அளவிற்கு அதிகமான செல்வவளம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
(4 / 6)
புரசு இலையில் குபேர யந்திரத்தை வைத்து தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களினாலான தகடை ஒன்பது கட்டங்களாக்கி, அதில் எப்படிக் கூட்டினாலும் 72 என்கிற கூட்டுஎண் வருவது போன்ற எண்களை போடவேண்டும்.
(5 / 6)
முதலில் குபேரருக்கு முன்பு குத்து விளக்கேற்றி தாமரை அல்லது வில்வ மலரால் அர்ச்சனை செய்து, 72 நாட்கள் குபேர மந்திரத்தை உச்சரித்தால் அளவில்லாத செல்வவளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மற்ற கேலரிக்கள்