Elumichai Pariharam: பண விரயத்தை தடுக்க வீட்டில் நேர்மறை எண்ணங்களை புகுத்த இதை கட்டாயம் பண்ணுங்க
- ஒரு வீட்டில் பசங்களுக்கு தொடர்ந்து உடல்நிலை முடியாமல் போவது, கீழே விழுந்து அடிபடுவது, கணவன்-மனைவிக்குள் சண்டை இதுபோன்று எந்த நேரமும் ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றார் கண் திருஷ்டி பட்டிருக்கிறது என அர்த்தம்.
- ஒரு வீட்டில் பசங்களுக்கு தொடர்ந்து உடல்நிலை முடியாமல் போவது, கீழே விழுந்து அடிபடுவது, கணவன்-மனைவிக்குள் சண்டை இதுபோன்று எந்த நேரமும் ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றார் கண் திருஷ்டி பட்டிருக்கிறது என அர்த்தம்.
(1 / 6)
கெட்ட எண்ணங்களுடன் ஒருவர் நம்மை பார்த்துவிட்டாலே போதும். எதிர்மறை எண்ணங்கள் நம் உடலை சூழ்ந்துவிடும். அந்த எதிர்மறை ஆற்றல் நம்மிடம் வந்துவிட்டாலே நன்றாக இருக்கும் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க தொடங்கும்.
(2 / 6)
வீட்டில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக் கூட நோய்நொடி வரக் கூடும். காசு வீட்டில் தங்காது. மாத்திரை மருந்துக்கே பணம் செலவாகிக் கொண்டிருக்கும். பணம் குவியுதோ இல்லையோ செலவு மட்டும் ஆகிக் கொண்டே இருக்கும்.
(3 / 6)
நமது சாப்பாட்டு அறையில் இருக்கும் சாப்பாடு அப்படியே இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் நம்மதியாக சாப்பிடக் கூட முடியாது.வீடு சுத்தம் செய்ய முடியாது. அப்படியே குப்பையுடன் இருக்கும். மேலும், அந்த வீட்டில் குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும்.
(4 / 6)
இதெல்லாம் கண் திருஷ்டி பட்டதற்கான அறிகுறிகள் ஆகும். இந்தப் பரிகாரத்தை வாரத்தில் ஒரு நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையில் செய்யுங்கள். கண் திருஷ்டி இருக்கிறதோ இல்லையோ இந்த வழிகளை ஞாயிறு தோறும் செய்துவந்தால் நமது குடும்பத்தை கண் திருஷ்டி ஒன்றும் செய்யாது.
(5 / 6)
எலுமிச்சையை அடி பாகத்தில் ஒட்டியிருக்குமாறு விட்டுவிட்டு வெட்டுங்கள். இப்போது நான்கு பாகங்களாக இருக்கும் எலுமிச்சையின் நடுவில் சிவப்பு நிறத்தில் இருக்கும் கல் உப்பை வைத்திடுங்கள். அந்த கல் உப்பின் மேல் கிராம்பை குத்தி வையுங்கள்.
மற்ற கேலரிக்கள்