Reheating Food : எச்சரிக்கை! உணவை மீண்டும் சுடவைத்து உட்கொள்ளாதீர்கள்! உடலுக்கு கேடு விளைவிக்கும்
- Healthy Food Habit: சில உணவை நாம் மீண்டும் சுடவைத்து உண்ணக்கூடாது. அவை உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். அவ்வாறு சுடவைத்து உண்ணக்கூடாத உணவுகள், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்ன என்று இங்கு தெரிந்துகொள்வோம்.
- Healthy Food Habit: சில உணவை நாம் மீண்டும் சுடவைத்து உண்ணக்கூடாது. அவை உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். அவ்வாறு சுடவைத்து உண்ணக்கூடாத உணவுகள், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்ன என்று இங்கு தெரிந்துகொள்வோம்.
(1 / 8)
ஒரு சிலர் காலையில் சமைத்த உணவை இரவில் மீண்டும் சுடவைத்து சாப்பிடுவார்கள். இது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
(2 / 8)
நீங்கள் இதுவரை எதாவது உணவை சூடு செய்து சாப்பிட்ருக்கிறீர்களா? மைக்ரோவேவில் கூட சூடு செய்து சாப்பிட வேண்டாம்
(3 / 8)
எந்த ஒரு காயையும் மீண்டும் சூடு செய்து உண்ணாதீர்கள். அவற்றில் உள்ள நைட்ரேட்டில் இருந்து நைட்ரோசமைன்கள் உருவாகும். அவை உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் குறையும்.
(4 / 8)
பெரும்பாலான மக்கள் காலையில் சோறு சமைத்து அதை இரவு வரை வைத்திருந்து உண்கிறார்கள். சமைத்த சோறு ஆறியவுடன் அதில் பல கிருமிகள் உருவாகிவிடும். அதை மறுபடியும் சுடவைக்கும்போது அவை அழியாது. மாறாக வயிற்றுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
(5 / 8)
குளிர்காலத்தில் நிறைய பேர் காளான் சாப்பிடுவார்கள். அதை மீண்டும், மீண்டும் சூடு செய்யும்போது அதில் சில வேதிப்பொருட்கள் உருவாகின்றன. அதனால், வயிற்றுப்பிரச்னைகள் ஏற்படுகின்றன
(6 / 8)
உருளைக்கிழங்கு நாம் அதிகம் விரும்பி உண்ணும் காய். இதை மீண்டும் சூடுபடுத்தும்போது அதில் பாக்டீரியாக்கள் உருவாகும். அவை எவ்வளவு சூடு செய்தாலும் போகாது. எனவே அந்த உணவு வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதில் உள்ள சத்துக்களையும் இழக்க நேரிடும்
(7 / 8)
சிக்கனையும் சமைத்து வைத்துக்கொண்டு சூடு செய்து சாப்பிடுகிறார்கள். இதனாலும் சிக்கனில் உள்ள சத்துக்கள் குறைவதுடன், வயிற்றுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
மற்ற கேலரிக்கள்