தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : மீண்டும் ஒரு கொடூரம்.. லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை கொன்ற காதலன்.. கதறி துடித்த பெற்றோர்!

Crime : மீண்டும் ஒரு கொடூரம்.. லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை கொன்ற காதலன்.. கதறி துடித்த பெற்றோர்!

Divya Sekar HT Tamil
Jun 16, 2023 12:28 PM IST

பெங்களூருவில் லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

காதலியை கொன்ற காதலன்
காதலியை கொன்ற காதலன்

ட்ரெண்டிங் செய்திகள்

அதே நிறுவனத்தில் ஆர்பித் (27) என்ற இளைஞரும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கும் அகான்ஷாக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் இன்றாக வெளியே சுற்றுவது என இருந்துள்ளனர். பின்னர் இருவரும் ஒரே இல்லத்தில் தங்களாம் என முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி இருவரும் லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர். முதலில் நன்றாக சென்ற இவர்களது காதலில் அடிக்கடி சண்டைவர ஆரம்பித்தது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அகான்ஷா தங்கியிருந்த வீட்டிற்கு கடந்த 5 ஆம் தேதி சென்ற ஆர்பித் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

முடிவில் அகான்ஷாவை கொலை செய்த ஆர்பித் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் அங்கு இருந்தவர்கள் அகான்ஷா உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகான்ஷா பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பெண்ணின் உடலை பார்த்து கதறிதுடித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அகான்ஷா தற்கொலை செய்து கொண்டது போன்று தெரிந்தது.

பின்னர் போலீசார் அறையில் கைப்பற்றிய செல்போனை வைத்து விசாரித்ததில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதாவது அகான்ஷாவை கொலை செய்த பின்னர் அதை தற்கொலையாக மாற்ற சீலிங் ஃபேனில் அவரது சடலத்தை ஆர்பித் தொங்கவிட முயற்சித்தார். இது தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து தனது செல்போனை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து அவர் தப்பியோடினார்.

இதுதொடர்பாக தனிப்படை அமைத்துள்ள போலீசார் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக தேடி வருகின்றனர். அவர் சொந்த ஊரான டெல்லிக்கு சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் டெல்லிக்கும் விரைந்துள்ளனர்.

உயிரிழந்த அகான்ஷாவின் குடும்பத்தில் அவர்தான் மூத்த மகள். அவருக்கு 2 தங்கைகள் மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். அகான்ஷா மூலமாக மட்டுமே தங்களது பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்து வந்ததாக அவரது தந்தை ஞானேஸ்வர் கூறியுள்ளார். மேலும் ஆர்பித் யார் என்பது தங்களுக்கு தெரியாது என கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்