Bihar Viral : சாக்கடையில் கட்டுக்கட்டாக சிதறி கிடந்த பணம்.. வாரி சென்ற மக்கள்.. இதோ பாருங்க வீடியோ!
பீகாரில் சாக்கடையில் கட்டுக்கட்டாக சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
பீகாரில் மாநிலம் பாட்னா அருகே உள்ள சசாராம் பகுதியில் பாலத்திற்கு அடியில் ஓடிய கழிவுநீரில் கட்டுக்கட்டாக 100, 1000, 2000. 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாலத்தில் கூடினர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கழிவுநீரில் ரூபாய் நோட்டுகள் மிதப்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள் துற்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் சாக்கடைக்குள் இறங்கினர். சாக்கடைக்குள் இறங்கியவர்கள் இரண்டாயிரம், 500, 100 ரூபாய் நோட்டுகளை அள்ளிச்சென்றனர்.
பணத்தை எடுக்க சாக்கடைக்குள் இறங்கி மக்கள் பணத்தை கட்டுகட்டாக எடுக்க அதனை பலர் சுற்றி நின்று பார்த்து வீடியோ எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், பொதுமக்களை அப்புறப்படுத்தினர். பணத்தை கொண்டு சென்ற சிலர் அவை உண்மையான நோட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அவை போலியான தாள்கள் என்று ஒரு சிலர் கூறினர். கழிவு நீரில் ரூபாய் நோட்டுகளை வீசியவர்கள் யார் என்றும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “காலை 8 மணியளவில், வாய்க்காலில் பணம் மிதப்பதைக் கண்டோம். அது போலியான பணம் என நினைத்தோம். பின்னர் அங்கு இருந்து சென்றோம். சிறிது நேரம் கழித்து நாங்கள் திரும்பி வந்தபோது பணம் எதுவும் மிதக்கவில்லை. இது உண்மையான ரூபாய் நோட்டுக்கள் என சிலர் கூறுகிறார்கள். சிலர் இது போலியான ரூபாய் நோட்டுகள் என கூறுகிறார்கள்” என்று கூறினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்