Manipur : தீவிரவாதக் குழுவின் தலைவர் மெய்தே லீபுன் சென்ற வாகனம் தாக்குதல்?
மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்திற்கு மத்தியில் குழுக்களிடையே பகைமை மற்றும் குற்றச் சதியை ஊக்குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிரமோத் சிங் பயணித்த வாகனத்தின் மீது ஆறு தோட்டாக்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை இம்பாலில் உள்ள லாங்கோல் என்ற இடத்தில் மணிப்பூரின் தீவிரவாதக் குழுவின் தலைவரான மெய்தே லீபுன் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் அறிந்த மக்கள் தெரிவித்தனர். மேலும் விவரங்கள் மற்றும் போலீஸ் அறிக்கை காத்திருக்கும் நிலையில், ஆறு தோட்டாக்கள் வாகனத்தை தாக்கியதாக அறிவிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
காலை 7:10 மணியளவில் மருத்துவமனை அருகே பிரமோத் சிங்கின் வாகனம் தாக்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். "நான் நன்றாக இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன். தோட்டாக்கள் என்னைத் தாக்கவில்லை, எனது வாகனத்தின் ஓட்டுநரும் எந்த காயமும் இல்லாமல் தப்பினோம்”என்று சிங் இம்பாலில் இருந்து தொலைபேசியில் கூறினார். சிங்கின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது இந்த தாக்குதல் நடை பெற்றுள்ளது.
சிங், 56, ஜூலை மாதம் மாநிலத்தில் இன வன்முறைக்கு மத்தியில் குக்கி குழுவின் புகாரின் பேரில் குழுக்களிடையே பகைமை மற்றும் குற்றச் சதியை ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
முன்னதாக மே 3 முதல் ஆதிக்கம் செலுத்தும் Meitei மற்றும் பழங்குடி குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறையில் குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50,000 க்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஜூன் 7 ஆம் தேதி தி வயர் பத்திரிகையின் பத்திரிக்கையாளர் கரண் தாப்பருடன் பேட்டியளித்த பின்னர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் குக்கிகளை வெளியூர் ஆட்கள் என்றும், மணிப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல என்றும் அந்த பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.