Mumbai Murder : காதலியை குக்கரில் வேகவைத்த விவகாரம்.. வாக்குமூலத்தில் வெளியான பகீர் தகவல்.. இதுதான் காரணமாம்!
காதல் மனைவியைத் துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்த விவகாரத்தில் கணவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள நீரா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதான மனோஜ் சகானி. இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்ட நிலையில், அகமத் நகரைச் சேர்ந்த 36 வயதான சரஸ்வதி வைத்தியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர் எந்த உறவினர்களும் இல்லாத பெண் என்பதால் மனோஜ் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் இருந்தாலும் தொடர்ந்து இருவரும் உறவில் இருந்து வந்துள்ளனர்.
தொடர்ந்து உறவிலிருந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். மீரா ரோடு கீதா நகர் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏழாவது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தாலி கட்டாமல் கணவன் மனைவி போல் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்த காரணத்தினால், சரஸ்வதியை மனோஜ் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று இரண்டு பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ் காதலி சரஸ்வதியைச் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
பின்னர் அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக மனோஜ் கொடூரமான திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார். அதன்படி, மரம் அறுக்கும் எந்திரத்தைக் கொண்டு சரஸ்வதியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி உள்ளார். உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் தனித்தனியாகத் துண்டித்துள்ளார். பின்னர் அந்த உறுப்புகளை ஒரு பெரிய குக்கரில் போட்டு அடுப்பில் வேக வைத்துள்ளார்.
தடயங்களை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மனோஜ் மேற்கொண்டுள்ளார். சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நயா நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மனோஜ் தங்கி இருக்கும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது சரஸ்வதியின் முதல் அழுகிய நிலையில் கடந்துள்ளது. இதனைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது உடலின் உறுப்புகள் அனைத்தும் வெட்டப்பட்டு பாதியாகக் கடந்துள்ளது.
சமையலறையில் குக்கரில் வேக வைத்த நிலையில் உடல் உறுப்புகள் இருந்துள்ளன. பிளாஸ்டிக் கவரில் அந்த உறுப்புகளை எடுத்து ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். உடனே அந்த வீட்டிலிருந்து மனோஜ் சகானியை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடந்த்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மனோஜ் சகானி அளித்த வாக்குமூலத்தில், சரஸ்வதியின் பெற்றோர் அவர் குழந்தையாக இருக்கும் போதே பிரிந்துள்ளனர். சரஸ்வதி தனது தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில், சில ஆண்டுகளில் தாய் மரணமடையவே ஆதரவற்றோர் இல்லத்தில் அவர் வாழத் தொடங்கினார். பள்ளிப்படிப்பை அங்கு முடித்த சரஸ்வதி, 18 வயதுக்குப் பின் அங்கிருந்து வெளியேறி முதலில் சகோதரி வீட்டில் 4 ஆண்டுகள் வசித்துள்ளார்.
அதன் பின்னர் தான் மும்பை வந்த சரஸ்வதி அங்கு மனோஜை சந்தித்துள்ளார். வேலை தேடி கஷ்டப்பட்ட காலத்தில் சரஸ்வதிக்கு மனோஜ் பல உதவிகளை செய்துள்ளார். வேலை, வீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்து தந்த மனோஜ் சிறித காலம் கழித்து தனது வீட்டிலேயே தங்கிக்கொள்ளுமாறு கூறி அழைத்து சென்றுள்ளார். இந்த காலத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து கோயிலுக்கு சென்று மாலை மாற்றியுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துகொள்ளவில்லை.
தனது படிப்பு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை எடுக்க அவ்வப்போது ஆசிரமத்திற்கு செல்லும் சரஸ்வதி அங்குள்ளவர்களிடம் மனோஜை தாய் வழி மாமா என்றும் இவர் வீட்டில் தான் வசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அவர் மும்பையில் பெரிய துணி மில் முதலாளி பெரிய பணக்காரர் என பொய் கூறியுள்ளார். மேலும், இந்த நிலையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மனோஜ், தனக்கு எச்ஐவி நோய் இருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக தங்களுக்குள் பாலியல் உறவு ஏதும் வைத்துக்கொள்ளவில்லை என்றுள்ளார். தனக்கு இந்த நோய் விபத்து ஒன்றில் ரத்தம் மாற்றும் போது பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து பரவியது.
சரஸ்வதிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாகவும் தன்னை ஏமாற்றி வருவதாகவும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவரிடம் பலமுறை கேட்டு சண்டையிட்டேன். ஒரு கட்டத்தில் சரஸ்வதியை கொலை செய்ய திட்டமிட்டேன். இதனால் அவரை கடுமையாக அடித்து உதைத்தில் இறந்துவிட்டாள். பின்னர், எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். அப்போது தான் எனக்கு டெல்லியில் காதலி ஷரத்தாவை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டியது நினைவுக்கு வந்தது. அதேபோலவே சரஸ்வதியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றேன் என என மனோஜ் சானே வாக்குமூலம் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.