அச்சோ என்ன இது ஐபோனுக்கு வந்த சோதனை..வெடித்து சிதறிய ஐபோன்..!
எனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஐபோன் சூடாகிய பின் நான் அதை வெளியே எடுத்தேன் அப்போது பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது என பிரேம்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த ஐபோன் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் சிங். 48 வயதாக இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக பணியாற்று வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் தனது பேண்ட் பாக்கெட்டில் ஐபோன் ஒன்றை வைத்திருந்தார். திடீரென தனது iphone அதிகமாக சூடாக்குவதை உணர்ந்தார்.
இதை அடுத்து ஃபோனில் இருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஐபோனை பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுக்கும் முன்பே அது பயங்கர சட்டத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் பிரேம் ராஜ் சிங்குக்கு இடது தொடை மட்டும் கட்டைவிரலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இச்சம்பவம் அப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஐபோன் சூடாகிய பின் நான் அதை வெளியே எடுத்தேன் அப்போது பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது என பிரேம்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்