Crime: குஜராத்தை பதற வைத்த தந்தை..பெற்ற மகளையே 25 முறை கத்தியால் குத்தி கதற கதற கொலை செய்த கொடூரம்!
Gujarat: குஜராத்தில் பெற்ற மகளை தந்தையே 25 முறை கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் குடும்ப தகாராறு காரணமாக தனது மகளை ஒரு நபர் 25 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பகீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
குஜராத்தின் சூரத் நகரில் ராமானுஜ் சாஹூ என்ற நபர் மனைவி, பிள்ளைகளுடன் வசிக்கிறார். 45 வயதான இவருக்கு ரேகா என்ற மனைவியும், மகன்களும், சாந்தா என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது தொடர்பாக ராமானுஜுக்கும் அவரது மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ராமானுஜ் சாஹூ கடும் ஆத்திரம் அடைந்தார். இதில் மனைவியும் மற்ற மகன்களும் தலையிட்ட நிலையில், கணவர் ராமானுஜ் மேலும கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இந்நிலையில் ஆத்திரம் தாங்காமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளை சரமாரியாக குத்தி தாக்கத் தொடங்கினார்.
பதறிப்போன தாய் ரேகா மகளை காப்பாற்ற குறுக்கே பாய்ந்துள்ளார். இதில் அவருக்கும் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராமானுஜ் தனது மகளை ஆத்திரம் தீர 25 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண் சந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ராமானுஜ் கத்தியால் குத்திய வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவரது மனைவியின் இரண்டு விரல்களையும் வெட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமானுஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது குஜராத்தில் பெற்ற மகளை தந்தையே 25 முறை கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.