Bihar wedding: 'அக்காவிற்கு மாலைபோட்டு தங்கைக்கு தாலி கட்டிய மணமகன்' பரபரப்பான திருப்பங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்
Unique Wedding In Bihar: அக்காவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லாவில்லையெனில் மாடியில் இருந்து குதிக்கப்போவதாக மிரட்டினார்
பீகாரில் அக்காவிற்கு மாலை போட்டு விட்டு கடைசியில் தங்கைக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் முபராக்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த நிஷா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்திருந்தனர். இந்நிலையில் உறவினர்கள் திருமணத்திற்கு வந்திருந்ததையடுத்து மணமகனும் மணமேடைக்கு வந்துவிட்டார். இதையடுத்து திருமண சடங்குகளின் வழக்கப்படி மண மகளும் மணமேடைக்கு வந்தார். இருவரும் மாலை அணிவித்துக்கொண்டனர். இதைக்கண்ட உறவினர்கள் தம்பதியின் ஜோடி பொருத்தத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதைடுத்து மணமகன் தாலி கட்டவேண்டும். இந்த நேரத்தில் மணமகளின் இளைய சகோதரி எனக்குத்தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று கூறி யாரும் எதிர்பாராத நிலையில் ரகளையில் ஈடுபட ஆரம்பித்தார்.
இதனால் திருமண வீட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் தனது இளைய மகளிடம் பேசி பார்த்தனர். ஆனால் அப்பெண் தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்தார். உறவினர்கள் சொல்வதை எல்லாம் கேட்க அவர் தயாராக இல்லை. அதோடு உனக்கும் விரைவில் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதனை கேட்காமல் வீட்டின் மாடிக்கு சென்று தனக்கு இப்போது அக்காவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லாவில்லையெனில் மாடியில் இருந்து குதிக்கப்போவதாக மிரட்டினார்.
அந்த பெண் தன் பெற்றோரை மட்டுமில்லாது மணமகனையும் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.பின்னர் வேறு வழியின்றி இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தகராறு ஏற்பட்டது. உடனே போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மணமகன் ஏற்கெனவே முடிவான பெண்ணின் இளைய சகோதரியை திருமணம் செய்வது என்று முடிவானது. அதன் படி மணமகன் அக்கா கழுத்தில் மாலை அணிவித்துவிட்டு, வேறு வழியின்றி தங்கையின் கழுத்தில் தாலி கட்டினார். இச்சம்பவத்தால் அக்கிராமம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மணமகன் மணமகளின் சகோதரியுடன், ஏற்கனவே தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்