Crime: பெற்ற தாயே குழந்தைகளை கொலை செய்து பிரிட்ஜில் வைத்த கொடூரம்!
குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு காரணம் வறுமை மட்டும்தானே வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்கொரியாவில் தனக்கு பிறந்த 2 குழந்தைகளை தாயே கொலை செய்து பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தென் கொரியாவில் 30 வயது பெண் ஒருவருக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தனக்கு 3 குழந்தைகள் மட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை வெளியானது. அந்த பெண்ணிற்கு பிறந்த இரண்டு குழந்தைகளைத் தானே கொலை செய்து பிரிட்ஜில் வைத்துள்ளார்.
இதுகுறித்து தென்கொரியாவின் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், " தற்போது குற்றம் சாட்டி உள்ள பெண்ணிற்கு ஏற்கனவே 8,10 மற்றும் 12 வயதில் 3 குழந்தைகள் இருந்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணின் மருத்துவமனை குறிப்பின் அடிப்படையில் அவருக்கு 5 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டதை அந்த பெண் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையின் கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணின் குடும்பம் கடும் வறுமையில் இருந்துள்ளது. இதனால் தனக்கு பிறந்த 5 குழந்தைகளையும் காப்பாற்றுவது கடினமான ஒன்றாக இருந்திருக்கிறது. இதனால் கடந்த 2018ம் ஆண்டு பிறந்த பெண் குழந்தையை குழந்தை பிறந்த மறுநாள் வீட்டுக்கு வந்ததும் கொலை செய்துள்ளார். 2019ம் ஆண்டு பிறந்த ஆண்குழந்தையை மருத்துவமனையிலேயே கொலை செய்து கொண்டு வந்துள்ளார். இந்த இரண்டு குழந்தைகளையும் பிரிட்ஜில் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவரது கணவரிடம் கேட்டபோது அந்த எனது மனைவி கருக்கலைப்பு செய்ததாக தெரிவித்தார். ஆனால் இப்போதுதான் எனக்கே உண்மை தெரிய வந்தது என கூறினார் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு காரணம் வறுமை மட்டும்தானே வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்