தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: அதிர்ச்சி சம்பவம்..தாயை தாக்கிய தந்தையை அடித்தே கொன்ற மகன்!

Crime: அதிர்ச்சி சம்பவம்..தாயை தாக்கிய தந்தையை அடித்தே கொன்ற மகன்!

Karthikeyan S HT Tamil
Apr 24, 2023 11:35 AM IST

Maharashtra Crime: தாயை அடித்ததற்காக தந்தையைக் மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம் - கோப்புபடம்
க்ரைம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே, ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக ராஜேஷ் அவரது மனைவியை அவ்வப்போது தாக்கியுள்ளார். இதைப் பார்த்த மகன் பிரகாஷ் தந்தையை கண்டித்து வந்துள்ளார். மகனின் கண்டிப்பை மீறியும் மனைவியை ராஜேஷ் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மீண்டும் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் பிரகாஷ் கூர்மையான ஆயுதத்தால் தந்தை பிரகாஷை கடுமையாக தாக்கினார். இதில், படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார். ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை கொலை செய்த பிரகாஷை கைது செய்தனர். தாயை அடித்ததற்காக தந்தையைக் மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்