ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு!
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 4-க்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி' என்ற பெயர் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மீது பர்னேஷ் மோடி என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். பர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மார்ச் 23-ல் தீர்ப்பளித்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
சிறை தண்டனை விதிக்கப்பட்டதுன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ராகுலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர் நீதிமன்றமும் கடந்த 7-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து அவதூறு வழக்கில் சிறைத்தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவதூறு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 18-ஆம் தேதி ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி, இந்த மனுவை 21 (இன்று) தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்குப் பதில் அளிக்க பர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்