NEET exam issue: ’நீட் விவகாரம்! கல்வி மாஃபியாக்கள் உடன் அரசு இயந்திரம் கூட்டு!’ பாஜகவை விளாசும் ராகுல் காந்தி!
NEET exam issue: கல்வி மாஃபியா மற்றும் அரசு இயந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்தக் வினாத்தாள் கசிவு தொழிலை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. எங்கள் தேர்தல் அறிக்கையில், சட்டம் இயற்றுவதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவு பிரச்னையில் இருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.

NEET exam issue: ’நீட் விவகாரம்! கல்வி மாஃபியாக்கள் உடன் அரசு இயந்திரம் கூட்டு!’ பாஜகவை விளாசும் ராகுல் காந்தி!
நீட் தேர்வில் உங்கள் குரலாக மாறுவேன் என ராகுல் காந்தி கூறி உள்ளார். ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நீட் தேர்வு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள அவர், ”நரேந்திர மோடி இன்னும் பதவியேற்கவில்லை, நீட் தேர்வில் நடந்த ஊழல் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் பேரழிவுக்கு உட்படுத்தி உள்ளது.
ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். ஆனால் வினாத்தாள் கசிவு தொடர்பான வாய்ப்புகளை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
