தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Britain Jail: ஹைடெக் சிறையில் ஆண் கைதியுடன் உல்லாசமாக இருந்த சிறை ஊழியர்!

Britain Jail: ஹைடெக் சிறையில் ஆண் கைதியுடன் உல்லாசமாக இருந்த சிறை ஊழியர்!

Karthikeyan S HT Tamil
May 05, 2023 01:45 PM IST

Prison Worker Arrested: மிகவும் பாதுகாப்பான சிறையிலேயே ஆண் கைதியுடன் சிறைப் பெண் ஊழியர் உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதி ஜோர்டான் மெக்ஸ்வீனி
கைதி ஜோர்டான் மெக்ஸ்வீனி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், 'எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து' என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையாக கருதப்படும் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, சிறையில் கைதியாக இருந்த ஜோர்டானை, அந்த சிறையில் பணியாற்றும் 32 வயதான பெண் ஊழியர் ஒருவர் நீண்ட நாட்களாக ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஆனால், இது குறித்த ஆதாரங்கள் எதுவும் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் அந்த பெண் ஊழியர் ஜோர்டான் மெக்ஸ்வீனியுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் சிக்கின. இதையடுத்து அந்த பெண் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த பெண் ஊழியர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் மீது லண்டன் போலீஸார் சிறை போன்ற முக்கியமான இடத்தில், தவறான நடத்தை போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவும் பாதுகாப்பான சிறையிலேயே கைதியுடன் சிறைப் பெண் ஊழியர் உல்லாசம் அனுபவித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்