தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Pradhan Mantri Garib Kalyan Anna Yojana Scheme Extension For Three Months

Free Ration Scheme Extension: இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 28, 2022 02:58 PM IST

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

இலவச ரேஷன் திட்டம்
இலவச ரேஷன் திட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் காரணமாக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட வந்த ரேஷன் பொருட்கள் கூடுதலாக, ஐந்து கிலோ அரிசி, பருப்பு வகைகள், கோதுமை 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இலவசமாக வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றின் தாக்கம் நிற்காத காரணத்தால் இரண்டாவது அலையின் போது, இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் 80.96 கோடி பேர் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் நாளை மறுதினத்துடன் முடிவடைய இருந்தது.

இந்நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் இலவசமாக மேலும் மூன்று மாதங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

IPL_Entry_Point