Poison Gas Attack: ஆந்திராவில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி
விஷவாயு தாக்கியதில் 7பேர் உயிரிழந்த சோகம்
ஆந்திராவில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில் உள்ள பெத்தாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று ஆயில் டேங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் 7 பேர் பலியாகினர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் துவக்கி உள்ளனர்
கடந்த 5 ஆண்டுகளில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யில் நாட்டில் உத்தரபிரதேசம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், தில்லி முன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்