Lok sabha Election: பாஜகவால் 200ஐ தாண்ட முடியாது! இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்! அடித்து சொல்லும் மம்தா பானர்ஜி!
Mamata Banerjee: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று மம்தா பானர்ஜி கூறி உள்ளார்

இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தலின்படி பாஜகவால் 200 இடங்களை தாண்ட முடியாது என்றும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் துணை புரியும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியை அகற்ற முயற்சி
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயற்சி செய்ய பாஜக துணியக்கூடாது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதன் லட்சியங்கள் சிதைந்துவிடும், ஏனெனில் மக்களின் தீர்ப்பு திரிணாமுல் காங்கிரஸிடம் இருக்கும்" என்று கூறினார்.
"இதுவரை நடந்து முடிந்துள்ள ஆறு கட்ட வாக்குப்பதிவில் எனது பகுப்பாய்வு என்னவென்றால், பாஜக 200 இடங்களை கூட தாண்டாது. அதே நேரத்தில் டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும், திர்ணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.