Annamalai vs D Jayakumar: ’ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா?’ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விளாசும் ஜெயக்குமார்!
Annamalai vs D Jayakumar: பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள்

’ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா?’ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விளாசும் ஜெயக்குமார்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை பேட்டி
தனியார் செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகி செல்வதால் பாஜக அந்த இடத்தை பிடிக்கும்’ என்றும் அவர் கூறி இருந்தார்.
அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர்.