Telangana : ஒரே இரவில் இப்படியா? ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட 100 நாய்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தெலங்கானா மாநிலம் ஷாமிர்பேட்டை பகுதியில் உள்ள குப்பையில் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்து குவிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானாவில் 100 நாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேவ் ஏ ஸ்ட்ரே அமைப்பின் நிறுவனர் விதித் ஷர்மா கொல்லப்பட்ட நாய்களின் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தெலுங்கானா சிஎம்ஓ மற்றும் பிறரை டேக் செய்து, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஷாமிர்பேட்டை மண்டல் துர்பாக பள்ளியில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்; நாய்களை கொல்ல கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. இதன் காரணமாக ஒரே இரவில் இத்தனை நாய்கள் கொன்று குப்பையில் வீசப்பட்டுள்ளன என்று கூறினர்.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கொலை ஒரு வழி அல்ல என கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நாய்களுக்கு அரசாங்கத்தால் கருத்தடை செய்திருக்க வேண்டும் என தெரிவித்தனர். ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில், உத்தரபிரதேசத்தின் அலிகார் மற்றும் மொராதாபாத் மாவட்டங்களில் இரண்டு குழந்தைகள் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் தெருநாய்கள் கூட்டத்தால் நடுத்தர வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் சமீக காலமாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்