தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Budget 2023:பட்ஜெட் தாக்கலில் 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம் - நிர்மலா சீதாராமன்

Budget 2023:பட்ஜெட் தாக்கலில் 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம் - நிர்மலா சீதாராமன்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2023 12:51 PM IST

இந்த பட்ஜெட் தாக்கலில் ஏழு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, கடை நிலை வரை வளர்ச்சி உள்ளிட்ட ஏழு முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது;

  • சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் அடித்தளத்தின் மீது இந்த புதிய பட்ஜெட் அமைய உள்ளது.
  • உலகப் பொருளாதாரத்தில் நம் இந்தியா ஒளிரும் நட்சத்திரமாக விளங்கி வருகிறது. வரும் நடப்பு ஆண்டில் ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை இந்தியா காணும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
  • இந்தியாவில் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்கின்றன. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறந்த பட்ஜெட்டாக இது அமையும்.
  • உலக பொருளாதார தரவரிசையில் பத்தாவது இடத்திலிருந்து இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தனிநபரின் வருமானமானது இரட்டிப்பாகி உள்ளது.
  • 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 44 கோடி பேர் பலன் பெற்றுள்ளனர்.
  • இதுவரை 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 2.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. உணவு தானிய விநியோகத்திற்காக இரண்டு லட்சம் கோடி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 1.75 கோடி கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. பசுமை விவசாயம் மற்றும் பசுமை எரிசக்தி போன்றவற்றை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • ஜி 20 நாடுகளின் மாநாட்டில் இந்தியா தலைமை வகிப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம் ஆகும். மருத்துவ காப்பீடாக மக்களுக்கு 44.6 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • நிதித்துறை வளர்ச்சி, பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், தேசவளங்களை பயன்படுத்துதல் முக்கியத்துவம், கட்டமைப்பு மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடை நிலை வரை வளர்ச்சி உள்ளிட்ட ஏழு முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • அதிக அளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக உலக அளவில் இந்தியா முன்னுரிமை பெற்றுள்ளது. விவசாயத்தை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். சிறுதானியங்கள் ஆராய்ச்சி செய்வதற்காக ஹைதராபாத்தில் தனி நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.
  • கூட்டுறவுச் சங்கங்கள் குறித்த தரவுத் தளம் நாடு முழுவதும் உருவாக்கப்பட உள்ளது. தற்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்ந்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது.
  • விவசாய விளைபொருட்களைச் சேமிக்கப் பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது

இவ்வாறு தனது உரையின்போது கூறியுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்