தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Court: கிளார்க், பியூன் வேலை வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றியவருக்கு 5 ஆண்டு சிறை

Court: கிளார்க், பியூன் வேலை வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றியவருக்கு 5 ஆண்டு சிறை

Manigandan K T HT Tamil
Jan 04, 2024 10:40 AM IST

இந்த வழக்கை விசாரித்த பஞ்சுலா கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் ஹிதேஷ் கார்க், "குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றங்கள் தீவிரமானவை. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன,இதன் மூலம் மோசடிகள் நடத்தப்பட்டு, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்'' என்று கூறினார்.

நீதிமன்றம் (Getty Images/iStockphoto)
நீதிமன்றம் (Getty Images/iStockphoto)

ட்ரெண்டிங் செய்திகள்

கர்னாலில் உள்ள நிலோகேரியைச் சேர்ந்த அம்ரித்பால் என்ற பர்வீன் என்பவருக்கும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பஞ்ச்குலா கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் ஹிதேஷ் கார்க், "குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன,  மோசடிகள் அதிகரித்துள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் சண்டிகர் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இதே போன்ற மற்றொரு வழக்கில் ஈடுபட்டுள்ளார் என்ற உண்மையை நீதிமன்றம் மறந்துவிட முடியாது" என்று நீதிபதி தெரிவித்தார்.

பஞ்ச்குலாவில் வசிக்கும் புகார்தாரர் சுனில் சாஹல், 2020 ஏப்ரல் 23 அன்று, குற்றம்சாட்டப்பட்ட அம்ரித்பால் ஒன்பது பக்க நியமன கடிதத்துடன் தன்னை அணுகியதாகவும், அது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் இருந்து வந்ததாகவும் கூறினார்.

அம்ரித்பால் மற்றும் ஜஸ்மர் சிங், சுஷில் மாலிக் (இன்னும் கைது செய்யப்படவில்லை) ஆகிய இருவர் நியமனக் கடிதத்திற்கு ரூ .8 லட்சம் கோரியதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர், பணி நியமனக் கடிதம் போலியானது என்பது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள்  எழுத்தர்கள் மற்றும் பியூன்களை போலியாக நியமித்ததில் ஈடுபட்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.

அவரது புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 467/468/471 (மோசடி) மற்றும் 120-பி (கிரிமினல் சதி) ஆகியவற்றின் கீழ் சந்திமந்திர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுனில் நீதிமன்றத்தில் ஆஜராகி, கடந்த ஆட்சேர்ப்பில், விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் 20 பேர் நியமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னிடம் கூறியதாக கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்